News
கல்கிசை பிரதேச வீடொன்றிற்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் உயிரிழப்பு

கல்கிசை – வட்டரப்பல வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.
இதில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

