VIDEO > ஒரு வித்தியாசமான திருடனால் குழப்பமடைந்த பிரதேச மக்கள் – வீடொன்றிற்குள் நுழைந்து 30 நிமிடமாக தேடி ஒரு மாம்பழத்தை திருடிச் சென்றார் #இலங்கை

ஒரு வழமைக்கு மாறான திருட்டு சம்பவம் பதிவாகியதையடுத்து நாவல பிரதேசவாசிகள் குழப்பமடைந்துள்ளனர், அங்கு ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக அந்த வளாகத்தை சோதனையிட்டார், பின்னர் ஒரே ஒரு மாம்பழத்தை திருடிக் கொண்டு வெளியேறினார்.
அதிகாலையில் இடம்பெற்ற இந்த வினோதமான சம்பவத்தை வீட்டு உரிமையாளர்கள் அவதானித்த போது அவர்களது அலமாரிகள் மற்றும் உடமைகள் திறந்தும் இடம் மாறியும் உள்ளதை அவதானித்துள்ளனர்.
வீட்டிற்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருடன் மாம்பழத்துடன் செல்லும் முன்பு பல்வேறு அறைகளில் திருட சோதனை செய்தது தெரியவந்தது.
காவல்துறையினரிடம் உள்ள இந்த வீடியோவில், அவசரத்தின் அறிகுறி இல்லாமல், நபர் அமைதியாக வீட்டை ஆராய்வதை காணலாம்
அதிகாரிகள் தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் மதிப்புமிக்க பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொள்கிறார்கள். வீடியோ பார்க்க… 👇 https://x.com/NewsWireLK/status/1876491439393120336?t=VBt9ylVKm0U-6-EluQ4axQ&s=19


