News

துபாயில் இருந்து 19,800 ‘பிளாட்டினம்’ சிகரட்டுக்களை கொண்டு வந்த புத்தளம், வேப்பமடு நபர் கைது

டி.கே.ஜி.கபில

சுமார் ரூ 2.97 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற பயணி ஒருவர், (08) இரவு விமான நிலைய போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

புத்தளம், வேப்பமடுவில் வசிக்கும் 34 வயதான இவர், துபாயில் இரண்டு வருட காலப் பணியை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பினார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-652 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அன்றிரவு 7.30 மணியளவில் வந்தடைந்தார்.

அவர் தனது பயணப் பையில் 19,800 வெளிநாட்டுத் தயாரிப்பு “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 99 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது, ​​ போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்தப் பயணி பொலிஸ் பிணையில், விடுவிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரும் அவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த சிகரெட்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 15ஆம் திகதியன்று முன்னிலைப்படுத்தவுள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button