News
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நேற்று (20) இரவு அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக வழங்கிய முறைப்பாட்டையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

