Site icon Madawala News

மரண வீடொன்றில் பெண் ஒருவருக்காக ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

மரண வீட்டில் ஒன்றில் பெண் ஒருவரைப் பற்றி ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆண்ணொருவரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில், ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

எகொட உயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version