தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாதாள உலகத்திற்கான பாதை காணாமல் போயுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாதாள உலகத்திற்கான பாதை காணாமல் போயுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த நாட்களில் பாதாள உலக செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இந்த மோதல்களில் ராஜபக்ஷக்கள் தொடர்பான சாட்சியங்கள் கொல்லப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
பாதாள உலகம் சும்மா பிறக்கவில்லை என்றும் முறையான ஆட்சி இருந்திருந்தால் பாதாள உலகம் உருவாகியிருக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் பாதாள உலகமானது பழைய அரசியல் அமைப்புடன் தொடர்புடையது எனவும், ஆட்சிக்கு வந்தவுடன் பாதாள உலகத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று பாதாள உலகக் கொலைகள் நடைபெறுவதற்கு சில சான்றுகள் இருப்பதாகவும் கடந்த நாட்களில் ஜனாதிபதி மாளிகையின் அலரி மாளிகையில் இருந்தே பாதாள உலகம் இயங்கியதாகவும் பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.



