News

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றதற்கு மேலதிக செலவுகளுக்காக தனக்கு வழங்கப்பட்ட அமெரிக்க டொலர்களை திருப்பிக் கொடுத்த NPP பாராளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார்.

ஜெனீவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் “பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW)” 90ஆவது அமர்வு நடைபெற்றுள்ளது.

இந்த அமர்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக மேலதிக செலவுகளுக்காக ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் படி 6 நாட்களுக்கு வழங்கப்பட்ட 240 அமெரிக்க டொலர்களை அரசாங்கத்திற்கு திருப்பி கொடுத்துள்ளார்.

அவர் அந்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுத்தமைக்கான பற்றுச்சீட்டை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button