Site icon Madawala News

வரலாற்றில் முதல் முறையாக “கௌரவ” நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கியுள்ளோம்..

வரலாற்றில் முதல் முறையாக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறுகிறார்.

பாராளுமன்றத்தில் கௌரவ உறுப்பினர்கள் யாரும் இல்லை என்றும், தொழிலதிபர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

வரலாற்றில் முதல்முறையாக, அந்த தொழிலதிபர்கள் இல்லாமல் கௌரவமான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளதாகவும் சுனில் வட்டகல வலியுறுத்துகிறார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Exit mobile version