News

1 வயது 8 மாதங்களேயான ஆண் குழந்தை வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து ஜனாசாவாக மீட்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் 08ம் வாய்க்கால் பகுதியில் குழந்தையொன்று வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் இன்று (24)இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தை மிஹ்ரான் இசான் வயது (ஒரு வயது எட்டுமாதமும் நிறைந்த ) எனத் தெரியவருகிறது.

வீட்டுக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ள குழந்தையை தேடிய போது சுமார் 100 மீற்றர் தூரத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஜனாசாவாக மீட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

குறித்த உயிரிழந்த குழந்தையின் ஜனாசா கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் குறித்த ஜனாசா ஒப்படைக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



Hasfar A Haleem BSW (Hons)
Journalist

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button