நான்கு இலங்கையர்கள்மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ஒருதலைபட்ச’ நடவடிக்கை .

நான்கு இலங்கையர்கள்மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்த தடையானது ‘ஒருதலைபட்ச’ நடவடிக்கை எனவும், இலங்கையின் தேசிய நல்லிணக்க செயல்முறையை இது பாதிக்கும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்” என்ற தலைப்பில் ஐக்கிய இராச்சியத்தின், வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அலுவலகம் நேற்று முன்தினம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அது தொடர்பிலேயே வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம் தடைவிதித்த 4 இலங்கையர்களில் மூவர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகளாவர்.
இதற்குப் தண்டனையிலிருந்து பொறுப்பானவர்களுக்குத் விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியை ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திக்கான சுட்டிக்காட்டியுள்ளது. அலுவலகம்
ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் விதித்த இந்த தடை ஒருதலைபட்ச நடவடிக்கையாகும் எனவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள்மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதை அமைச்சு அடிக்கோடிட்டுக் தெரிவித்துள்ளது. காட்ட விரும்புவதாகவும்
நாடுகளின் இத்தகைய ஒருதலைபட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு உதவாததுடன், அதற்கு மாறாக செயன்முறையை மேலும் சிக்கலாக்குவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள்மூலம் கையாளப்பட வேண்டும்.
இலங்கை வெளிவிவகார இலங்கைக்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய இராச்சியத்தின் உயர் உஸ்தானிகர் இடத்தில் தெரிவித்தார்.

