News

அடுத்த மூன்று நான்கு வருடங்களில் இலங்கை பிராந்தியத்தில் மிகக்குறைந்த மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக மாறும்..

தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அதிகம் கூச்சலிடுபவர்கள் அதிகமாக அச்சத்தில் உள்ளவர்களே என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பெலியத்தவில் தெரிவித்தார்.

மே மாதத்தில் பெரும் எண்ணிக்கையிலான சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடரப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இது குழப்பமடைய வேண்டிய விடயம் அல்ல என்று கூறிய ஜனாதிபதி, மிகவும் வலுவாக வழக்கை தாக்கல் செய்து வழக்கை விசாரித்த பின்னர் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மூன்று முன்னாள் அமைச்சர்கள் தற்போது விளக்கமறியலில் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் சிறிது காலம் கழித்து நாடாளுமன்றத்தை அங்கு நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பேரணியில் இன்று பெலியத்தையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை திவாலாக்கியவர்கள் மீண்டும் ஆட்சி அமைப்பார்கள். எவருக்கும் கனவுகள் இருக்கலாம்.அவை ஒருபோதும் யதார்த்தமாக மாறாது. அடுத்த மூன்று நான்கு வருடங்களில் இலங்கை பிராந்தியத்தில் மிகக்குறைந்த மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக மாறும். உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை பலத்தை நாம் பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Recent Articles

Back to top button