News

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞனை விடுதலை செய்யக் கோரியும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கந்தளாயில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞனை விடுதலை செய்யக் கோரியும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கந்தளாய் பேராறு மார்கன் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர் உட்பட ஆறு பேர் கலந்து கொண்டனர். சமூக செயற்பாட்டாளர் இப்ராஹீம் முபாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “பயங்கரவாத சட்டத்தின் ஊடாக அப்பாவி மக்களை தண்டிக்காதே”, “அரசே இளைஞனை விடுதலை செய்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பொலிஸாரின் கண்காணிப்பில் அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசாங்கம் உடனடியாக இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மூலம் அப்பாவி மக்கள் தண்டிக்கப்படுவதை நிறுத்தி இளைஞனை அரசாங்கம் விரைந்து விடுதலை செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button