News

மார்ச் மாதத்தில் 2.6 சதவீத பணச்சுருக்கம் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை

2025 மார்ச் மாதத்தில் நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 4.2 சதவீத பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இந்த நிலை சற்று முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

உணவில்லா பணச்சுருக்கம் 2025 பெப்ரவரி மாதத்தில் பதிவாகியிருந்த 6.1 சதவீதம் என்பதிலிருந்து மார்ச் மாதத்தில் 4.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. உணவு வகைகளுக்கான பணச்சுருக்கம் 2025 பெப்ரவரி மாதத்தில் 0.2 சதவீதமாக காணப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் 0.6 சதவீத பணவீக்கமாக உயர்ந்திருந்தது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button