News

என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம்,  ஆனால், என் மனைவிக்கு கை வைத்தால் நான் என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியும்; ஜனாதிபதிக்கு லொஹான் ரத்வத்த எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது மனைவிகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

லொஹான் ரத்வத்தே கூறுகையில், ஜனாதிபதி தன்னை மட்டுமல்லாமல், தனது மனைவியையும் தடுப்பு காவலில் வைத்ததாக தெரிவித்தார்.


“வெட்கக்கேடு. என்னையும் என் மனைவியையும் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல், இப்போது முன்னாள் முதலமைச்சர் ஒருவரும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் மனைவியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.


1983-84 ஆம் ஆண்டு ஜே.வி.பி. கலவரங்களின் போது நடந்த குற்றங்களுக்கு ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று லோகன் ரத்வத்தே மேலும் தெரிவித்தார்.


“நாட்டுக்கு நல்லது செய்தால் உங்களை ஆதரிப்போம். இல்லையெனில், எங்களுக்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். ஆனால், என் மனைவியைத் தொட்டால், நான் என்ன செய்வேன் என்பது எனக்குத் தெரியும்,”

என்று ரத்வத்தே ஜனாதிபதியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே லோகன் ரத்வத்தே இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button