News

மேலதிக வகுப்பு என கூறிவிட்டு சென்ற 15 வயது மாணவி, அவரின் காதலன் உள்ளிட்ட 7 பேரால் வன்புணர்வு – பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து அனைவரும் கைது.

பதினைந்து வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியுடன் வந்த பாடசாலை மாணவியின் பெற்றோர் பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு, சில மணி நேரங்களுக்குள் ஏழு சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார்தெரிவிக்கின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் பதினைந்து வயதான பாடசாலை மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பாடசாலை மாணவி, தனது காதலன் என்று கூறிக்கொண்ட பாடசாலை மாணவனை சந்திக்க வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

தான் ஒரு டியூஷன் வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறிவிட்டு, அந்த அந்த மாணவனை சந்திக்க வந்துள்ளார். அந்த நேரத்தில், சந்தேக நபரான மாணவன் , சிறுமியை ஹோமகமவின் மாகம்மன பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கு அவரின் நண்பர் ஒருவரும் இருந்துள்ளார்.

அத்துடன் காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரையிலான ஆறு மணி நேரத்திற்குள், பாதிக்கப்பட்ட சிறுமி ஹோமாகமவின் மாகம்மன பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது சந்தேகத்திற்குரிய பாடசாலை காதலன் மற்றும் அவரது 6 நண்பர்களால் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவன் உட்பட ஏழு பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button