News

வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை சிங்கள மக்கள் தவிர்க்க வேண்டும் : வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம்

வட,கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாண நீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணி சூ.யே. ஜீவரட்ணம்  அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும் அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமான பொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கி அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

 கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிரணய உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடைய காணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும் அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதை இரத்துசெய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன மத சமூக நல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார் காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும் புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம் வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும் அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதான நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-6478762967923661&output=html&h=430&adk=2505235472&adf=810158359&pi=t.aa~a.3987509640~i.9~rp.4&w=430&abgtt=6&lmt=1749528483&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=3675283187&ad_type=text_image&format=430×430&url=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F217061%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTEAAR7cERQrKYwt7tB3Dp2jTRc60ywchyRLZ5szEdvsq4NGt_uo-yuhuKf86bCgSA_aem_WaySakTSRd2TSx_h92rD2g&fwr=1&pra=3&rh=334&rw=400&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1749528483212&bpp=1&bdt=1421&idt=-M&shv=r20250609&mjsv=m202506050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D5148b84ee8991da3%3AT%3D1749521971%3ART%3D1749528482%3AS%3DALNI_MbyKoYq187kYKk8kSanuWiKRXs_xQ&gpic=UID%3D000011279afa2b55%3AT%3D1749521971%3ART%3D1749528482%3AS%3DALNI_MbtW1Gi76a1hN2OLLVTYyJYEgWotw&eo_id_str=ID%3D7a6572222149bd31%3AT%3D1749521971%3ART%3D1749528482%3AS%3DAA-AfjZ0b_kM_x-BsdBIbp9XL7T4&prev_fmts=0x0%2C430x430%2C430x430%2C430x430&nras=2&correlator=1606656371947&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=932&u_w=430&u_ah=932&u_aw=430&u_cd=24&u_sd=3&adx=0&ady=2945&biw=430&bih=731&scr_x=0&scr_y=0&eid=31092113%2C31092661%2C31092756%2C31092896%2C31092900%2C95353387%2C31092907%2C95344791%2C95362800%2C95359266%2C95362805%2C95363071%2C31092675&oid=2&psts=AOrYGsnpWR23L9efgbemcKYc4FY2EEq2wiuAhKQuPaYHJguQaIGqodGcOy3BBe1ZYHq2K9407RbAN2lwkVDFDYXLOSEQ&pvsid=323630437474049&tmod=516554604&uas=3&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C430%2C0%2C430%2C731%2C430%2C731&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&dtd=595

அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளை கையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்ற விகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கிறது. அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள் கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும் அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்ட விரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கிய தங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டு நல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்து அவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடைய கடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம். 

அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்து அவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளை இப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்த விரும்புகின்றது என்றுள்ளது.

Recent Articles

Back to top button