News

எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா ஒத்திவைக்கப் பட்டது.



கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெறவிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள, கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வு இம்மாதம் பிற்பகுதியில் மீண்டும் திட்டமிடப்படும் என்று அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனையையும், கட்சிக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளையும் அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலதா மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button