News

ஜே.வி.பி எனது முன்னாள் கட்சியாக இருப்பதால், தற்போதைய அரசாங்கம் பிழைகள் இன்றி தேசத்தை உயர்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு  எம்மால் எந்த ஆட்சேபனையும் இல்லை ; விமல்

தற்போது தேசிய மக்கள் சக்தியாக (NPP) அதிகாரத்தில் இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஜேவிபிக்கும் என்பிபிக்கும் (தேசிய மக்கள் சக்தி) இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீரவன்ச, நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி கட்சி நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“ஜே.வி.பி எனது முன்னாள் கட்சியாக இருந்ததால், தேசத்தை உயர்த்துவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச நிர்வாகத்தில் காணப்படுவது போல் ஒவ்வொரு புதிய அரசாங்கமும் தேனிலவு காலத்தை அனுபவிக்கிறது, ஆனால் அரசாங்கத்தின் உண்மையான தன்மை காலப்போக்கில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button