எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எமது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளோம் – எங்களுக்கு அளிக்கபடும் வாக்குகள் NPP க்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும் ; வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
குறித்த தகவலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தத் தேர்தலில் என்.பி.பி.க்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் ஆனால் NPP க்கு ஆதரவளிப்பதன் மூலம் அதைச் செய்யும்.
“இந்தத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக NPP உடன் உறவை உருவாக்க முயற்சித்தோம். ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாங்கள் அவ்வாறு முயற்சித்தோம், ஆனால் கொள்கை வேறுபாடுகளால் அது பலனளிக்கவில்லை” என்றார்.
எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு அளிக்கபடும் வாக்குகள் NPP க்கு அளிக்கப்பட்ட வாக்குகள் என்று நாங்கள் கூறுகிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்
இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

