News

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தது உலகத்துக்கும் நல்ல நாள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.



இதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பொறுப்பேற்றார். இதற்கிடையே, காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.



இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் மரணமடைந்தார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் நல்ல நாள் என பதிவிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button