News

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சிங்கள பேச்சு போட்டியில் கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி, பாத்திமா ஸல்மா அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தை சுவீகரித்து வெற்றி

கல்வி அமைச்சினால் 2024 நவம்பர் மாதம் 03ம் திகதி இசுருபாய, பத்தரமுல்லையில் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்கள) பேச்சு போட்டி* – தரம் 8 பிரிவில், கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி, பாத்திமா ஸல்மா அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் சுவீகரித்து வெற்றி பெற்றுள்ளார். 

இவர், தற்போது கெலிஓயாவில் வசிக்கும்,  கல்ஹின்னையச் சேர்ந்த ஹில்மி ஹலீம்தீன், ஸமீரா நியாஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவர்.


மேலும், இவர் கல்ஹின்னை ‘கல்லூட்டுக் கவிராயர்’ கவிஞர், மர்ஹூம் M.H.M. ஹலீம்தீன் மற்றும் உடுநுவர காதி நீதவான் மௌலவி, F. M. நியாஸ்  ஆகியோரின் பேத்தியும் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button