இலங்கையின் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஹேக்கர்ஸால் திருடப்பட்டுள்ள நிலையில், அதில் 200 டாலர்களை அமெரிக்க அதிகாரிகளின் உதவியுடன் மீட்டகப்பட்டது

நிதி அமைச்சின் கணினி அமைப்புடன் தொடர்புடைய ஹேக்கர்ஸ் ஊடுருவலைத் தொடர்ந்து, மோசடி செய்பவர்களுக்கு மாற்றப்பட்ட காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 200 அமெரிக்க டாலர்களை மட்டுமே இலங்கை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே டைம்ஸ் நாளிதழின் படி, கருவூலத்திலிருந்து வெளிநாட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் காணாமல் போன நிதியைக் கண்டறிய இலங்கை அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளின் உதவியை நாடியிருந்தனர்.
பணத்தின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிலும், மற்றொரு பகுதி வேறு மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியுடனும் தொடர்புடையது என கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், டெலவெயர் கணக்கு காலியாக இருப்பதாகவும், இரண்டாவது கணக்கில் 200 அமெரிக்க டாலர்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தொகை மீண்டும் இலங்கைக்கு மாற்றப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



