News

ரபான் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய மட்டத்தில் மீண்டும் சாதனை

நூருல் ஹுதா உமர்

திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கலாச்சார அமைச்சினால் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கலாசார போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) ரபான் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர் எம்.ஐ.எம்.அமீர் அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்று பாராட்டி கௌரவித்தனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button