News
அரகல போராட்டத்தின் பின் பலமான சமூக ஊடக ஆர்வலராக அறியப்பட்ட ‘ஜீன் ஆன்ட்டி’ மற்றும் அவரது கணவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தபட்டது.

அரகல போராட்டத்தின் பின்னர் வலுவான சமூக ஊடக ஆர்வலராக அறியப்பட்ட ‘ஜீன் ஆன்ட்டி’ மற்றும் அவரது கணவரும் இரு நபர்களால் தாக்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எடரமுல்லையில் உள்ள தமது வீட்டில் இருந்தபோது தாம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் எடரமுல்லை பொலிஸாருடனான தொடர்பை அம்பலப்படுத்தும் வகையில் தாம் சமூக ஊடக வலையமைப்புகளில் பதிவுகள் வெளியிடப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்



