News

தறாவீஹ் தொழுகைக்காக பஸார்கள் மூடப்படுமா?

என்.எல்.எம்.மன்சூர்- ஏறாவூர்

புனித ரமழான் பாவ­மீட்சி பெற்று பரி­சுத்­த­ம­டை­வ­தற்­காக அல்லாஹ் அளித்த அருட் கொடை­யாகும். பதி­னொரு மாதங்கள் செய்த பாவங்­களை போக்க ரம­ழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அப­ரி­மி­த­மான அமல்­களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்­தர்ப்­ப­மாகும்.

பக­லிலே நோன்பு நோற்று இர­விலே நின்று வணங்­கு­வதை அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறி­யுள்ளார். அதன்­படி பக­லிலே பசி­யோடும் தாகத்­தோடும் அல்­லாஹ்வுக்­காக பொறு­மை­யுடன் நோன்பு நோற்க வேண்டும். இர­விலே தராவீஹ் தொழுகை, ஹிஸ்பு, திக்ர், துஆ, திலாவத் போன்ற வணக்­கங்களில் ஈடு­பட வேண்டும். இவ்­வாறு வழி­பட்டு நடப்­பதால் வல்­லவன் அல்­லாஹ்வின் நெருக்­கமும் நேசமும் கிடைக்­கின்­றது.

இரவில் நின்று வணங்­குதல்

புனித ரம­ழானில் மஸ்­ஜி­து­களில் இஷாத் தொழுகை பிந்தியே ஆரம்­பிக்­கப்­படும். அதனைத் தொடர்ந்து தறாவீஹ் தொழுகை நடை­பெறும். தறாவீஹ் என்­பது றாஹத்­தாக ஆறு­த­லாக தொழு­வதைக் குறிக்கும். இந்த றாஹத்தான அமல்­களில் எத்­த­னை பேர் ஈடு­ப­டு­கின்­றார்கள் என்­பதை பார்த்தால் வேத­னைப்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. சிலர் மஹ்­ரிபை தாம­த­மாக தொழு­து­விட்டு இஷாவுக்­கான நேரம் வந்­ததும் தனி­யாகத் தொழு­து­விட்டுச் செல்­வார்கள். வேறு­ சிலர் ஜமா­அத்­துடன் சேர்ந்து இஷாத் தொழுது விட்டு தறாவீஹ் தொழாமல் சென்­று­வி­டு­வார்கள். எஞ்­சி­யுள்ளோர் தறாவீஹ் தொழு­வார்கள்.

எமது முன்­னோர்­களின் முன்­மா­திரி

எமது மூதா­தை­யர்கள் நோன்பு காலத்தை மிகப்­பெ­று­ம­தி­யாக திட்­ட­மிட்டுப் பயன்­ப­டுத்­து­வார்கள். புனித ரழமான் வரு­வ­தற்கு முன்­னரே பல ஏற்­பா­டு­களைச் செய்­வார்கள். நோன்­பாளி மஸ்­ஜி­து­களில் அதி­க­மான நேரத்தை பெறு­ம­தி­யான அமல்­களில் ஈடு­பட்டுக் கழிப்­ப­தற்கு சந்­தர்ப்­பத்­தை­ ஏற்­ப­டுத்தி கொடுப்­பார்கள்.

பெண்கள் பயான்

பெண்­க­ளுக்­கென பள்­ளி­வா­சல்­களில் பிரத்­தி­யே­க­மான பயான் நடை­பெறும். காலை 10 மணி­ய­ளவில் தனி­யொரு உல­மாவைக் கொண்டு தொடர்ந்து பல விட­யங்­களைப் பற்றி ஹதீஸ் சொல்­வார்கள். பெண்கள் மறை­வா­க­விருந்து கேட்டு பய­ன­டை­வார்கள். ஆண்கள் உட் ­பள்­ளி­யி­லி­ருந்து கேட்டு பய­ன­டை­வார்கள்.

நோன்பு திறக்கும் ஏற்பாடும் தறாவீஹும்

நோன்­பாளி வீட்டில் நோன்பு திறப்பதால் மஃரிப் தொழு­கையின் இமாம் ஜமா­அத்தை தவற விடக் கூடா­தென்­ப­தற்­காக பள்­ளி­வா­சலில் நோன்பு திறப்­ப­தற்­காக கஞ்­சி­யுடன் சம்­பலும் ஏற்­பாடு செய்­வார்கள். அதி­க­மானோர் குர்ஆன் திலாவத் திக்ர், துஆவில் ஈடு­பட்டு நோன்பு திறந்து இமாம் ஜமா­அத்­தாக தொழு­து­விட்டு நபில் தொழு­கையில் ஈடு­ப­டு­வார்கள்.

தறாவீஹ் தொழு­கைக்­காக பஸா­ரி­லுள்ள கடைகள் மூடப்­படும். கடை உரி­மை­யா­ளர்கள், பணி­யா­ளர்கள், பொது­மக்கள் அனை­வரும் பள்­ளிக்குள் நிறைந்­தி­ருப்­பார்­கள். இருவர் முன்­வ­ரி­சை­யி­லி­ருந்து சங்கை நபியின் ஸல­வாத்தை சம்­ப­வங்கள் சிறப்­பு­க­ளுடன் உரத்துச் சொல்ல ஏனையோர் பதி­லுக்கு ஸல­வாத்தை சத்­த­மாகச் சொல்­வார்கள். சத்­தத்தால் பள்­ளியே அதிரும் “சங்கை நபி மீது ஸல­வாத்தை

சத்­தமாய்ச் சொல்வோம் மென்றார் முஹம்மத்” என்று படிக்க கேட்­டி­ருப்போர்

“அல்­லா­ஹும்ம ஸல்லி அலா முஹம்மத்

யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்” என்று கூறு­வார்கள்.

தறாவீஹ் தொழுது முடிய சுவை­யான காவா டீ தயா­ராகவிருக்கும். பின்னர் ஹிஸ்பு மஜ்லிஸ் நடை­பெறும். அதற்கு இமாம் பெறுப்­பா­கவி­ருப்பார். ஒவ்­வொ­ரு­வரும் தனித்­தனி குர்­ஆனை வைத்து கொஞ்சம் கொஞ்­ச­மாக ஓதி திருத்­த­மாக ஓதி முடிய இடி­யப்பம் சம்பல் இறைச்சி கறி சொதி காத்­தி­ருக்கும்.

27ஆவது இரவு குர்ஆன் தமாம், தஸ்பீஹ் தொழுகை, திக்ர், மஜ்லிஸ் சஹர் உணவு சுபஹ் தொழு­கை­யுடன் கலைந்து செல்­வார்கள்.

பெண்கள் கூட்­ட­மாக பல வீடு­களில் ஒன்­று­கூடி தொழு­வார்கள். இரவு வேளை­களில் பள்­ளிக்கு வர­மாட்­டார்கள்.

இன்­றைய நிலை

பொது­வாக இன்று மக்கள் வசதி வாய்ப்­புக்கள் கூடி செல்வச் செழிப்­போடு வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். பெண்கள் பஸா­ருக்கு வந்துவிட்­டார்கள். கடை­க­ளுக்குள் கண்ணில் பட்­ட­தை­யெல்லாம் கொள்­வ­னவு செய்யத் தொடங்­கி­விட்­டார்கள். ஒன்­றுக்கு மேற்­பட்ட தடவை கடை­க­ளுக்குள் ஏறி இறங்­கு­கின்­றார்கள்.

போதாக் குறைக்கு இரவு பஸார் வேறு வந்து விட்­டது. நோன்பு மாதம் அம­லு­டைய காலம், அமல்­களைக் கொள்­ளை­ய­டிக்கும் சந்­தர்ப்பம் என்­ப­தையும் மறந்து பக­லிலும் இர­விலும் பஸா­ருக்குள் ஆண்­களும் பெண்­களும் பிள்­ளை­க­ளு­மென பெருங் கூட்டம் தெரு­விலே நட­மாட்டம் அதி­க­ரித்து விட்­டது. கடை­களும் நேர­கா­ல­மின்றி திறந்தே இருக்­கின்­றன. மஸ்­ஜி­து­களில் இருக்க வேண்­டிய பெருங் கூட்டம் பஸாரில் அலை­வதால் பல பள்­ளி­வா­சல்கள் வெறிச்­சோடிக் காணப்­ப­டுகின்றன.

சில வர்த்தகர்கள் தாமும் தொழுகைக்குச் செல்வதில்லை தமது ஊழியர்களையும் தொழுகைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. சில தினங்களுக்கு முன்னர் கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தறாவீஹ் தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு இரவு 10 மணிக்கு கடையை மூடிய பின்னர்தான் செல்லாம் என கடை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தக் கடையிலிருந்து விலகி தொழுகைக்காக வந்திருந்த ஒரு இளைஞரைப் பற்றி அறியக் கிடைத்தது. இப்படியும் சில வர்த்தகர்கள் இருக்கிறார்கள்.

ஒரு சில மஹல்­லாக்­களைத் தவிர பல பள்­ளி­வா­சல்­களில் தறாவீஹ் அமல்­க­ளுக்கு மக்கள் குறை­வா­கவே கலந்து கொள்­கின்­றார்கள். சில பள்­ளி­வா­சல்­களில் ஐம்­பது பெண்கள் தொழுதால் ஆண்கள் நான்கு அல்­லது ஐவர் மட்­டுமே தறாவீஹ் தொழு­கின்­றார்கள். இப்­ப­டியும் நாட்டில் சிறிய பள்­ளிகள் ஏரா­ள­மா­க­வி­ருக்­கின்­றன.

தறாவீஹ் நேரத்தில் பஸாரில் விற்­ப­திலும் வாங்­கு­வ­திலும் ஈடு­ப­டு­வது கவ­லை­யான விட­ய­மாகும். அம­லு­டைய நேரம், ஹாபிழ்கள், காரிகள், அழ­கிய முறையில் அல்­குர்­ஆனை ஓதி மனங்­கு­ளிர வைத்து அல்­லாஹ்வின் உத­வி­யையும், றஹ்­மத்­தையும் அடைந்து கொள்ளும் சந்­தர்ப்பம் இதனைப் பறக்­க­ணித்து துன்­யாவின் பராக்கில் மூழ்கி ஆகி­றாவின் தேட்­டத்தை புறக்­க­ணிப்­பது நல்ல சகு­னமா?

வாலி­பர்கள் கூட்டங் கூட்­ட­மாக Phone இல் விளை­யாடிக் கொண்­டி­ருக்கும் காட்­சி­களும் பஸாரில் காணப்­ப­டு­வது பயப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். குர்­ஆனைப் பார்க்க வேண்­டிய புரட்ட வேண்­டிய கைகளும், கண்­களும் பாவத்தை தேடிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த நிலை அல்­லாஹ்வின் அரு­ளுக்குப் பதி­லாக தண்­ட­னையை இறக்­க­மாட்­டா­தென்று எப்­படிச் சொல்ல முடியும்?

மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது யார்?

தறாவீஹ் நேரத்­திற்கு மட்டும் ஜும்­மா­வுக்கு மூடு­வது போல் கடைக்­கா­ரர்கள் மூடினால் மக்கள் பொருட்கள் வாங்கப் போக­மாட்­டார்கள். இதனை வர்த்­தக சங்கங்கள் ஒழுங்குபடுத்த முடி­யாதா?

மக்கள் பஸா­ருக்குப் போகாமல் மஸ்­ஜி­து­க­ளுக்கு சென்று அமல் செய்­வதில் ஈடு­பட்டால் கடைகள் திறக்­கப்­படமாட்­டாது. அதனை செய்­வது யார்? பள்ளி நிரு­வாகமா? பொதுப்­ப­ணி­களில் ஈடு­ப­டுவோர், புனித தஃவா பணி புரிவோர் ஆகி­யோர் இது பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களை பள்ளிவாசலை நோக்கி அழைப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.

எனவே தறாவீஹ் நேரத்தில் மட்டுமாவது கடைகளை மூடி பள்ளிகளை ஹயாத்தாக்கும் எமது முன்னோர்களின் முன்மாதிரியான நடைமுறைகளை எமது சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்த அனைவரும் முன்வருவோம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.- Vidivelli

Recent Articles

Back to top button