News
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வீண்விரயம் ,மோசடி, ஊழல் பூஜ்ஜியமாக மாறியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வீண்விரயம் ,மோசடி, ஊழல் பூஜ்ஜியமாக மாறியுள்ளதாகவும் எஞ்சியிருந்த பெருந்தொகைப் பணம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
எனவே, எதிரணியினர் என்ன சொன்னாலும், சிறப்பாகச் செல்லும் அரசாங்கத்தின் காலை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்ற அதிகாரத்துடன் அரசாங்கம் சாதாரண வேகத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதாக தெரிவித்த அவர், அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் வேகத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

