News

ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது ! மாற்றங்களை கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறியது !!

இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டுவர 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தன்னிடம் கூறியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளில் மாற்றங்களைச் செய்ய முடியாது என்றும், நான்கு அல்லது ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்க வேண்டும் அவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல்களின் போது இந்தக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

ஒரு ஒன்லைன் சேனலில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

Recent Articles

Back to top button