News

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதிச் சேவை ஆணைக்குழு பணிஇடைநீக்கம் செய்தது.

தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதிச் சேவை ஆணைக்குழு பணிஇடைநீக்கம் செய்துள்ளது.

அதற்கமைய, இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரத்தியேக விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி, திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வு பெற உத்தரவிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவருக்கான ஓய்வூதிய ஆவணங்களை நீதிச் சேவை ஆணைக்குழு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மினுவாங்கொடை மாவட்ட நீதிபதி மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஆகிய இருவரும் தவறான நடத்தை தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளுக்காக இலங்கை நீதிபதிகள் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button