News
சபீனா யூசுப் 2025 ஆம் ஆண்டின் மிஸஸ் ஸ்ரீ லங்கா அழகு ராணி பட்டத்தை வென்றார்

2025 ஆம் ஆண்டின் மிஸஸ் ஸ்ரீ லங்கா வேர்ல்ட் பட்டத்தை சபீனா யூசுப் வென்றுள்ளார்.
வியாழக்கிழமை (அக்டோபர் 03) நடைபெற்ற பிரமாண்ட இறுதிப் போட்டியில் இந்தப் பட்டம் அவருக்கு கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம், உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய திருமணமான பெண்களுக்கான சர்வதேச அழகுப் போட்டியான மிஸஸ் வேர்ல்ட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை சபீனா யூசப் பெறுகிறார்.
இந்த அழகுப் போட்டி, வெற்றியாளர்களுக்கு சர்வதேச மேடைகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.


