News
காத்தான்குடி வாவியில் மனிதர்களையும், விலங்குகளையும் விழுங்கி, நீண்ட நாட்களாக அட்டகாசம் செய்த இராட்சத முதலை, இறந்த நிலையில் கரையொதுங்கியது

ஏ. எல். எம் சபீக்
மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த இராட்சத முதலையொன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று (27) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுமார் 15 அடி நீளமுடைய இந்த இராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இறந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.



