குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெற முயற்சித்து, மோசடியில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரங்கள்

By: ziyad aia
பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் மிகப்பெரிய நிதி மோசடியில் சிக்கி, கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி தற்போது விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
⁉️ நடந்தது என்ன? (The Great Ponzi Trap)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய மற்றும் முன்னாள் வீரர்கள் சுமார் 12 பேர் ஒரு ‘போன்சி’ (Ponzi Scheme) நிதி மோசடியில் சிக்கியுள்ளனர்.
ஒரு தொழிலதிபர், வீரர்களிடம் “உங்கள் பணத்தை முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருகிறேன்” என ஆசை காட்டி இந்த மோசடியைச் செய்துள்ளார்.
யார் அந்த வீரர்கள்?
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ‘பிக்பாஸ்’களே உள்ளனர்:
🤦 பாபர் அசாம் (Babar Azam) – முன்னாள் கேப்டன்.
🤦 முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) – விக்கெட் கீப்பர்.
🤦 ஷாகீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi) – வேகப்பந்து வீச்சாளர்.
🤦 பக்கர் சமான் மற்றும் ஷதாப் கான் போன்ற முன்னணி வீரர்களும் இதில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மோசடி நடந்த விதம்:⁉️
🎯 நம்பிக்கை வலை: அந்த தொழிலதிபர் வீரர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர். பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அணிகளுக்கு ஸ்பான்சர் செய்தவர் என்பதால் வீரர்கள் அவரை கண்மூடித்தனமாக நம்பியுள்ளனர்.
🎯 ஆரம்ப கால லாபம்: தொடக்கத்தில் சில மாதங்களுக்கு, வீரர்கள் முதலீடு செய்த பணத்திற்குச் சரியாக லாபத் தொகையை (Profit) அந்த நபர் வழங்கியுள்ளார். இதை உண்மை என்று நம்பி, வீரர்கள் தங்கள் சேமிப்பு மட்டுமல்லாமல், உறவினர்களின் பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளனர்.
🎯 திடீர் எஸ்கேப்: ஒரு கட்டத்தில் லாபம் தருவதை நிறுத்திய அந்த நபர், “தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது” எனக் கூறிவிட்டு, செல்போனை அணைத்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
⁉️ எவ்வளவு நஷ்டம்?
சுமார் 100 கோடி பாகிஸ்தான் ரூபாய் (1 Billion PKR) வரை இந்த மோசடி நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல வீரர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இதில் இழந்து தவிக்கின்றனர்.
இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) கவனத்திற்குச் சென்றுள்ளது. வீரர்கள் தங்களுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய முதலீடுகளைச் செய்தது எப்படி என்பது குறித்தும், இதில் வேறு ஏதேனும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் உள்ளதா என்பது குறித்தும் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
🛑🛑 குறிப்பு: போன்சி மோசடி என்பது புதிய முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு பழைய முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவது போல் காட்டி ஏமாற்றும் ஒரு தந்திரமாகும்.
விளையாட்டில் கில்லாடிகளாக 😄 இருக்கும் வீரர்கள், நிஜ வாழ்க்கையில் இப்படி ‘கிளீன் போல்ட்’ ஆகியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தையும் கிண்டலையும் ஒருசேர உருவாக்கியுள்ளது.
இது போன்ற நிதி மோசடிகள் குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா? அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? உங்கள் கருத்து என்ன?
#ziyadaia
#PonziScheme
#PonziScam
#pakistancricket


