News
ஈரானின் தாக்குதலில் அமெரிக்க இராணுவத்தினர் 3 பேர் பலி – ஐந்து பேர் படுகாயம் – இஸ்ரேலில் 9 பேர் உயிரிழப்பு என உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வெளியானது

அமெரிக்க இராணுவத்தினர் 3 பேர் பலி; இஸ்ரேலில் 9 பேர் உயிரிழப்பு
வாஷிங்டன்:
ஈரான் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையில், அந்நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்கள் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து வீரர்கள் “மிகவும் பலத்த காயமடைந்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்:
இதற்கிடையில், இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் (Beit Shemesh) நகரின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



