ஈரானியத் தலைவர்களைக் காட்டிக்கொடுத்தால் $10 மில்லியன்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு.

முக்கிய ஈரானிய தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 300 கோடி இலங்கை ரூபாய்) வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக ஏ.எஃப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ‘நீதிக்கான வெகுமதி’ (Rewards for Justice) திட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
தேடப்படும் முக்கிய நபர்கள்:
• மொஜ்தபா கமேனி: ஈரானின் புதிய உச்ச தலைவர்.
• அலி அஸ்கர் ஹெஜாசி: உச்ச தலைவரின் துணை தலைமை அதிகாரி.
• அலி லாரிஜானி: மூத்த பாதுகாப்பு அதிகாரி.
• யஹ்யா ரஹீம் சபாவி: உச்ச தலைவரின் மூத்த இராணுவ ஆலோசகர்.
• இஸ்மாயில் காதிப்: உளவுத்துறை அமைச்சர்.
உலகளவில் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிடுதல் மற்றும் வழிநடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நம்பகமான தகவல்களை வழங்குவோருக்குப் பாதுகாப்பான இடமாற்றம் (Relocation) வழங்கப்படும் என்றும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.



