“அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருளைப் பயன்படுத்துங்கள்”

தற்போதுள்ள எரிபொருள் இருப்புகளை முறையாக நிர்வகிக்கும் நோக்கில், எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வரும் பின்னணியில், உள்நாட்டு விலைகளையும் அதற்கு இணையாக உயர்த்துவதை விட, எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே மிகவும் நடைமுறைச் சாத்தியமானதாகும் என்று அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் பொதுமக்களுக்கு உள்ள சமூகப் பொறுப்பு குறித்தும் அவர் நினைவுபடுத்தினார்.
தற்போதைய நெருக்கடி நிலையைத் தணித்து, இக்காலப்பகுதியை வெற்றிகரமாகக் கடந்து செல்ல மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தினார்.
புதிய விலை அதிகரிப்புடன், டீசல் லீட்டருக்கு 100 ரூபாயும், பெட்ரோல் லீட்டருக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக (சுமையாக) ஏந்துவதாகவும், ஒரு மாத காலத்திற்கு அரசாங்கம் இதற்காகச் செலவிடும் மொத்தத் தொகை 20,000 மில்லியன் ரூபாய் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



