News
நிலமை சீராகவில்லை என்றால் மே மாதம் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம் !

நிலமை சீராகவில்லை என்றால் மே மாதம் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
அடுத்தடுத்து இரண்டு தடவைகள் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுமா என ஊடவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.
யுத்தம் எப்போது நிறைவடையும் என எவராலும் யூகிக்க முடியாது. நிலமை சீராகவில்லை என்றால் மே மாதம் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.



