News
மக்கள் மீது சுமையை வழங்காமல் அரசு மாதாந்தம் 2000 கோடி சுமையை ஏற்றுக்கொண்டு விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது

இன்று முதல் விற்பனை செய்யும் ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாவை அரசு மாணியாக ஏற்கும் பெற்றோலுக்கு 20 ரூபாவை அரசு மாணியமாக ஏற்கும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
உலக சந்தையின் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப விலை அதிகரிப்பிற்கு சென்றால் மேலும் விலை அதிகரிக்கப்பட்டிருக்கும் என்பதால் மக்கள் மீது சுமையை வழங்காமல் அரசு மாதாந்தம் 2000 கோடி சுமையை ஏற்றுக்கொண்டு விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.



