ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி முஜிபுர் ரஹ்மான் ? சரத் வீரசேகர

2016 ஆம் ஆண்டு முதல் ஐஸ் ஐஸ் அமைப்புடன் தொடர்புடயவர்களுக்கு எதிராக புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தத்து முஜிபுர் ரஹ்மான என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர் குறிப்பிட்டார்.
2016 நவம்பர் 18 அன்று அன்றைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைய சிரியா சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
அப்போது அவருக்குக் கடும் தாக்குதல் நடத்தி, முஸ்லிம் சமூகத்தை அவர் அவமதிப்பதாகக் கூறி அவரை மௌனமாக்கியது முஜிபுர் ரஹ்மான் தான். அன்று அந்தத் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தியிருந்தால் 2019 தாக்குதலைத் தடுத்திருக்கலாம் என கூறிய சரத் வீரசேகர,
ஈஸ்டர் தாக்குதலுக்கு அனுசரானை வழங்கியது முஜிபுர் ரஹ்மானா எனவும் தனக்கு சந்தேக எழுவதாகவும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி நௌபர் மெலளவி என தான் கூறியது மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என நினைப்பதாக அவர் கூறினார்.



