News

குமார ஜயகொடியின் பதவி விலகல் ஒகே ஆனால் இது ஒரு தாமதமான ஒரு முடிவாகும் !

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாலும், அது மிகவும் தாமதமான ஒரு முடிவாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு முழு நாளைச் செலவிட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராகவே வாக்களித்தனர். இதன் மூலம், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து அவர்கள் அவருக்கு ஆதரவளித்தமை வெளிப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது பதிவின் ஏனைய முக்கிய கருத்துக்கள்:

• நிலக்கரி மோசடி: “நிலக்கரி மோசடியினால் ஏற்கனவே நாட்டிற்கு கோடிக்கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் பதவி விலகல் இடம்பெற்றாலும், ஏற்பட்ட நஷ்டத்திற்கு என்ன நடக்கும் என்பது தெளிவற்றதாகவே உள்ளது. இறுதியில், இந்த பாரிய மோசடியின் சுமையை நுகர்வோரே சுமக்க வேண்டியுள்ளது. ஒரு பதவி விலகல் மூலம் உண்மையிலேயே இழப்பீடு கிடைத்துவிடுமா என்பது கேள்விக் குறியே.”

• ஜனாதிபதியின் பொறுப்பு: “கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், குமார ஜயகொடியை இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சொன்றுக்கு நியமித்த பொறுப்பை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது கடந்தகால பின்னணியை நன்கு அறிந்திருந்தும், ஜனாதிபதி அவரை எரிசக்தி அமைச்சராக நியமித்ததுடன், அவருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அவரைப் பாதுகாத்தார்.”

• நேரடிப் பொறுப்பு: “நுகர்வோர் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கக் காரணமான நிலக்கரி மோசடிக்கு ஜனாதிபதியே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் அவர் குமார ஜயகொடியை ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாத்தார். இந்த அவதூறான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து பாதுகாக்கப்படார்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button