News
அனுர ஆட்சிக்கு வந்தால் டொலர் 425 ருபாவாக அதிகரிக்கும்..

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் அதற்கேற்ப வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் டொலர் 400 முதல் 425 ரூபா வரை உயரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, பணவீக்கம் 25% ஆக உயரும் என்றும், தவறு இருந்தால் புள்ளி விவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் திரு.ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

