News

இந்தியாவிடம் சரணடைந்த மாலைதீவு !

இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து, இந்தியாவை நெருங்கிய நண்பராகக் கருதி, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்றும், இந்தியாவுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் புதுடெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருவது இதுவே முதல் முறை. மாலத்தீவு அதிபர் முயிசுவை அன்புடன் வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது. முயிசுவின் மனைவியும் பயணத்தில் இணைந்துள்ளார்.

இன்று மாலத்தீவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகளும் மாலத்தீவுக்கு செல்வதை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாலத்தீவின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது குறைந்துள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி முயிசு தனது கடுமையான சீனா சார்பு கொள்கைகளை மாற்றி இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாலத்தீவின் நிதிப் பிரச்சனைகளை இந்தியா நன்கு அறிந்திருப்பதாகவும், மாலத்தீவுக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்தியப் பயணத்திற்குச் செல்வதற்கு முன் ஜனாதிபதி முய்சு பிபிசியிடம் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button