News
பங்களாதேச இந்துக்களுக்காக கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு !

பங்களாதேச இந்துக்களுக்காக உலக இந்து அமைப்புகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி வழி ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
பங்களாதேசத்தில் ஒடுக்கப்படும் இந்து சிறுபான்மை சமூகத்தின் துயர நிலையை வெளிக்கொணரும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

