News
அரசிடம் 300 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் கையிருப்பு இருக்கும் போதே விலை அதிகரிக்கப்பட்டமை அம்பலம் !

அரசிடம் 300 மில்லியன் லீட்டருக்கும் அதிகமான எரிபொருள் கையிருப்பு இருக்கும் போது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரன்வக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஏரிபொருள் கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
70 டொலருக்கு கொள்வனவு செய்த கச்சா எண்ணையை கருப்பு சந்தையில் விற்பனை செய்வதை போல விற்பனை செய்கின்றனர் என்றும் இந்த விலை அதிகரிப்பினால் அரசுக்கு 700 கோடிக்கும் அதிமான அசாதார லாபம் கிடைக்கும் என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.



