News

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, 720 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு – சட்ட நடவடிக்கையும் எடுக்க திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக 720 மில்லியன் பொது நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்ட அக் கட்சியின் தலைவர் டலஸ் அழகப்பெரும, நிதிப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பில் தம் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

அக்கட்சியின் அறிக்கையின் படி 
ரத்து செய்யப்பட்டு தேர்தல்களை நடத்துவதற்கான உத்தேச செலவு 8 பில்லியன் ரூபாய்,


தேர்தலை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தின் விளைவாக ஒட்டுமொத்த திட்டமிடப்பட்ட பட்ஜெட்டில் சுமார் 10% தேவையற்ற செலவினம் ஏற்பட்டது. இது 720 மில்லியன் ரூபாய் ஆகும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஜனநாயக செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், பொது மக்கள் மீது நிதிச் சுமையையும் சுமத்தியது, வரி செலுத்துவோர் நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் வெளியிட்ட  அறிக்கை தெரிவிக்கிறது 

தேர்தல் காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதுடன் அது 20 மில்லியன் ரூபாய் வரையான இழப்பீடு என மேலும் தெரிவிக்க ப் படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் கீழ் நிதி முறைகேடுகள், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துவதோடு தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட.தொடர்பான மற்ற குற்றச்சாட்டுகளையும் அக்கட்சி சுட்டிக்காட்டியது,

“இந்தப் பொருளாதாரத் தவறு செய்பவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பொது நிதியை மக்களுக்கு மீள வழங்குவதும், தேர்தல் வரலாற்றில் ஒழுக்கமான நடத்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதும் எனவும் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button