News
நாமல் ராஜபக்ஷவின் சட்டத்துறை பட்டம் மோசடி செய்து பெற்றுக்கொண்டது என நேரில் பார்த்த ஆதாரங்களுடன் குற்றம் சாட்டும் நபர் சாட்சியமளிக்க இலங்கை வருவதாக தெரிவித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் தி நாமல் ராஜபக்ஷ சட்டக்கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன என்பவர் தெரிவித்துள்ளார்
வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட புகாருக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் தாம் வழங்கியதாகவும், அனைத்து தகவல்களும் உண்மையே எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த கால அரசாங்கத்திடம் முறையிட்டும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Video 👇🏼
https://web.facebook.com/watch/?v=3957731007879272



