News

ஆறு இளைஞர்கள் 2 யுவதிகள் கலந்து கொண்ட பேஸ்புக் களியாட்டம் – சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார்

ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் பேஸ்புக் களியாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் ஆறு இளைஞர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து குஷ் , ஹேஷ் மற்றும் வெளிநாட்டு சிகரட்டுகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பேஸ்புக் களியாட்டத்தில் இரண்டு யுவதிகளும் ஆறு இளைஞர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் போதைப்பொருள் வைத்திருந்த ஆறு இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button