News
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க எமது கட்சியை இரண்டாக உடைத்துவிட்டார் !

ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தமது கட்சியை இரண்டாக உடைத்துவிட்டதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தாம் தூய எண்ணத்தோடு ரனில் விக்ரமசிங்கவை ஆதரித்தமைக்கு தங்களுக்கு கிடைத்த பரிசு கட்சிக்குள் பிளவு ஏற்பட்டமையே என அவர் குறிப்பிட்டார்.
கட்சிகளை பிளவுபடுத்துவது அவரின் பழக்கம் என கூறிய நாமல் ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி, எல் டி டி ஈ ஆகியவற்றை பிளவு படுத்திய அவர் பொதுஜன பெரமுனவை பிளவு படுத்தாவிட்டால் தான் புதினம் என குறிப்பிட்டார்.

