News
பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார் – கல்குடா பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை நிருபர்



