News
ஐக்கிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
கல்கிசை நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் இந்த நட்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது