News

இருந்த சம்பளமும் குறைந்துள்ளது..’ – நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டம்..

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சம்பள திருத்தத்தின் ஊடாக தமது சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை எதிர்த்து இன்று நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளுக்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பள திருத்தத்தின்படி, ஏப்ரல் மாத சம்பளத்தை விட, மார்ச் மாத சம்பளத்தை விட, குறைந்த சம்பளத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

Recent Articles

Back to top button