News

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,



சம்பள உயர்வு தரம் 3(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு  525 ரூபா. தரம் 2(I) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 1,335 ரூபா மற்றும் தரம் 1 இல் உள்ளவர்களுக்கு 1,630 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படாது. சுகயீன விடுமுறை போராட்டத்தின் போது பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் இதே அதிகரிப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button